
சென்னை: சென்னையில் 4 வழிச்சாலையாக உள்ள மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அதை 6 வழிச்சாலையாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்கு வரிசையாக அமைந்துள்ள 9 சிலைகளை இடமாற்றம் செய்யவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் உள்ளூர் மக்கள் முதல் வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் மெரினா கடற்கரையையொட்டி அமைந்துள்ள காமராஜர் சாலை எனப்படும் மெரினா கடற்கரை சாலை எப்போதுமே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். தற்போது மெட்ரோ ரயில் பணிகளும் நடைபெற்று வருவதால் இங்கு கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.