
சென்னை: சென்னையில் திருநங்கையர்களுக்கான அரண் இல்லங்கள் அமைப்பதற்கு, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான அறிவிப்பின் போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “திருநங்கைகளுக்கான அரண் எனும் பெயரில் 2 தங்கும் இல்லங்கள் சென்னை மற்றும் மதுரையில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.” என அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக சென்னை மாவட்டத்தில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரண் இல்லங்கள் அமைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.