
மதுரை: அற்பமான காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக வழக்கறிஞர்கள் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அடிக்கடி நீதிமன்ற புறக்கணிப்பு நடத்துவது சட்ட விரோதமானது. சிலர் நீதிமன்றத்தையும், போலீஸாரையும் மிரட்டும் நோக்கத்தில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.