
கிராமப் புறங்களுக்கு அனைத்து நாட்களிலும் மினி பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில் 1997-ம் ஆண்டு மினி பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் தொடங்கிவைத்தார். அதன்படி, 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில், அதிகபட்சமாக வழித்தட தூரத்தை 25 கி.மீ. நீட்டிப்பு செய்து, அதில் பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடங்களில் 65 சதவீத பேருந்துகளை இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.