
இஸ்ரேல் – ஈரான் இடையே தொடர்ந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால் ஈரானின் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, ஈரான் அயதுல்லா அலி கமேனியை பாதுகாப்பான இடத்துக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் சமூக வலைதளப்பக்கத்தில், “ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இருப்பிடத்தை அமெரிக்கா அறிந்திருக்கிறது. ஆனால் அவரை இப்போதைக்கு குறிவைக்கப் போவதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஈரான் நேற்று தன் நாட்டு மக்களிடம், “ஸ்மார்ட்போன்களிலிருந்து வாட்ஸ்அப்பை நீக்குங்கள். நம் தரவுகள் இஸ்ரேலுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது” எனக் கோரிக்கை வைத்தது.
ஈரானின் குற்றச்சாட்டுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்றவைகளை நிர்வகிக்கும் மெடா நிறுவனம், “எந்தவொரு அரசுக்கும் எந்தத் தகவலையும் நாங்கள் வழங்கவில்லை. இந்தத் தவறான அறிக்கைகள் மூலம் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் வழங்கப்படும் எங்கள் சேவைகள் தடுப்பதற்குதான் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு.
எங்கள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பேச்சுகளை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கிறது, இது சேவை வழங்குநர்கள் உட்பட மூன்றாம் தரப்பினருக்கு செய்திகள் அணுக முடியாததை உறுதி செய்கிறது என்று அது விளக்கியது. உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் கண்காணிக்கவில்லை, எல்லோரும் செய்தி அனுப்புகிறார்கள் என்ற பதிவுகளை நாங்கள் வைத்திருக்கவில்லை, மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் அனுப்பும் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் கண்காணிக்கவில்லை” என பதிலளித்திருக்கிறது.