
திருப்பதி: ஆந்திராவில் மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டும் நஷ்டம் அடைந்து விட கூடாது எனும் எண்ணத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு கிலோ மாங்காய் குறைந்தபட்சம் ரூ.12க்கு விவசாயிடமிருந்து பெற வேண்டுமெனவும், இதில் ரூ. 4 அரசு மானியம் வழங்கும் எனவும் அறிவித்துள்ளார். இதனை மாம்பழ விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று திருப்பதியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருப்பதி மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு மொத்தம் 14,582 ஹெக்டேர் நிலப்பரப்பில் 5.5 லட்சம் மெட்ரிக் டன் அளவு மாம்பழம் விளைச்சலாகி உள்ளது. திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 8 மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் உள்ளன.