
ராமேசுவரம்: ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து நேற்று ஆலயப் பிரவேசப் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசன வழியில் கட்டணமின்றி சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் பொறுப்பேற்ற இணை ஆணையர், உள்ளூர் மக்கள் ரூ.200 கட்டண சிறப்பு தரிசன வழியில் வருவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்.
இதனால், உள்ளூர் பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளூர் பக்தர்கள் கட்டணமின்றி மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரியும், ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலப் பேரவை சார்பில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.