
சென்னை: தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி கே.சுரேந்தர் இடமாறுதலில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய கே.சுரேந்தரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதை ஏற்று, அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், நீதிபதி சுரேந்தருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.