• June 17, 2025
  • NewsEditor
  • 0

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ Janaki vs State Of Kerala’ திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி கேரளாவில் நடந்த இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தன்னைப் பற்றிய விமர்சனங்கள் குறித்து மிகுந்த வருத்தத்துடன் பேசியிருக்கிறார் நடிகை அனுபமா. அதற்கு மலையாள திரையுலகில் எழுந்த விமர்சனங்களால் சிம்ரன், நயன்தாரா,

அனுபமா

“எனக்கு நடிக்கத் தெரியாது என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பத்துவிட்டார்கள். சமீபமாக நிறைய பிரச்னைகளை எதிர்க்கொண்டுவிட்டேன். என்னை விமர்சனம் செய்யுங்கள், அதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனம் என் வாழ்வையே மொத்தமாக அழித்துவிடக்கூடாது” என்று வருத்தமாகப் பேசினார்.

வருத்தமாகப் பேசிய அனுபமாவிற்கு ஆதரவாகப் பேசிய சுரேஷ் கோபி, “இது மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பிரச்னை. நடிகை சிம்ரன் இங்கு வந்தபோது இதேபோலத்தான் இங்கு அவரைக் குறைத்து மதிப்பிட்டார்கள். ஆனால், பின்னாளில் அவர் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

அனுபமா, சுரேஷ் கோபி

அசின், நயன்தாரா என இன்று உச்சத்தில் இருக்கும் பிரபல நடிகைகளுக்கும் அவர்களது ஆரம்ப காலத்தில் இதேபோலத்தான் பிரச்னைகள் வந்தது. இது மலையாளத்தில் இருக்கும் பிரச்னை. அவர்கள் எல்லாம் பெரிய நட்சத்திரங்களானார்கள். அதன்பிறகு அவர்களை விமர்சித்த பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் அவர்களிடன் வாய்ப்புக் கேட்டு ஓடியிருக்கிறார்கள். அதுபோலத்தான் அனுபா உங்களுக்கும் நடக்கிறது. நீங்கள் பெரிய நட்சத்திரமக வலம் வருவீர்கள். அதுதான் கர்மா” என்று பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *