
திப்ரூகர்: காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எப்போதும் வகுப்புவாத சக்திகளைப் பாதுகாக்க விரும்புவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
பக்ரித் பண்டிகையை ஒட்டி கடந்த 8-ம் தேதி அசாமின் பல இடங்களில் பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், அதன் மாமிசத் துண்டுகள் சில கோயில்களில் வீசப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக துப்ரி நகரில் 50 பேரையும், கோல்பாராவில் ஐந்து பேரையும் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர்.