
கரூர்: கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் திருச்சி வழியாக இன்று (ஜூன் 17) கரூர் ரயில் நிலைய சந்திப்புக்கு (ஜங்ஷன்) வந்து ஆய்வு மேற்கொண்டார்.