
புதுச்சேரி: “நாட்டின் பாதையை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தாத மாநிலங்கள் மறுபரீசனை செய்ய வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கோரினார்.
புதுவைக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வந்த குடியரசு துணைத் தலைவர் இறுதி நாளான இன்று புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் முன்பாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது நாட்டின் கல்விப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படும். இது உலகின் சிறந்த கல்விக் கொள்கைகளில் ஒன்றாகும். இது தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.