• June 17, 2025
  • NewsEditor
  • 0

பெரும்பாலான வீடுகளில் மின்சார ரைஸ் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரைஸ் குக்கரை பயன்படுத்துவது நோக்கம் சமையல் நேரத்தை குறைப்பதாகும். மேலும் அதுவே அரிசியை சோறாக மாற்றி சாப்பிடும் வரை சூடாக வைத்திருக்கும் என்பதால் இதனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

இந்த ரைஸ் குக்கர் 1950-களில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் கண்டுபிடிப்புக்கு பிறகு சமையலறைகளில் ரைஸ் குக்கர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திருக்கிறது.

சமீபத்தில் இந்த ரைஸ் குக்கரை கண்டுபிடித்தவரின் மகன் அய்ஜி மினாமி இது குறித்து கூறுகையில் “எனது குடும்பமே இதற்காக பாடுபட்டது. எனது தாய் உள்பட ஜப்பானிய பெண்கள் ஹகாம்ஸ் எனும் அரிசி குக்கர்களை பயன்படுத்தினர்.

ஒரு நாளைக்கு மூன்று முறை பரிசோதனை நிலையில் இதனை பயன்படுத்தினர். சரியான பதத்தில் எப்படி சமைப்பது என்பதில் கவனம் கொண்டு அந்த அரிசி குக்கரை பரிசோதித்து வந்தனர்.

அய்ஜி மினாமி

அரிசி குக்கரை கண்டுபிடித்தவர் யோஷிதாதா மினாமி

பகல், நள்ளிரவு என எல்லா வெப்பநிலையிலும் அந்த ரைஸ் குக்கரை பரிசோதித்தனர். எப்படி சோறு வெந்துள்ளது, என்பதை பார்ப்பது அவர்களின் வீட்டில் உள்ளவர்களின் வேலையாக இருந்தது.

சில சமயங்களில் அரிசி வெந்திருக்காது, சில சமயங்களில் கருகிவிடும். தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு அதனை மேம்படுத்தும் முயற்சியில் குடும்பத்தினர்கள் உதவியாக இருந்துள்ளனர்.

ஒரு வழியாக எனது தந்தை நன்கு வேகவைத்த சோறை அந்த குக்கரில் சமைத்தார் ” என்று அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் 1955-ல் யோஷிதாதா மினாமியின் குக்கர் தயாரானது. ஜப்பானிய சமையலறையில் நேரத்தை மிச்சம்படுத்தி இது பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இது பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *