
திண்டுக்கல்: “ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகியவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்று சான்று உள்ளதா? இவர்கள் அரசியல் காரணங்களுக்காக வாயில் வந்ததையெல்லாம் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தமிழுக்கு இருக்கும் தொன்மையை இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்” என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்.பி. ஜோதிமணி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியது: “கீழடியில் எப்பொழுதெல்லாம் நமது தொன்மை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசு, இது சரியில்லை, அது சரியில்லை, அறிவியல் பூர்வ ஆராய்ச்சி இல்லை என்கின்றனர்.