
திருத்தணி: காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே காதல் திருமண விவகாரம் தொடர்பாக கடந்த 6-ம் தேதி 17 வயது சிறுவன் கடத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.