• June 17, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜூலை 9-ம் தேதி பந்த் போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9-ம் தேதி பொது வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் இன்று (ஜூன் 17) நடைபெற்றது. இதில் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் மாதத்துக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 நிர்ணயம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்,

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *