
சென்னை: அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது கட்சியின் கருத்து அல்ல என, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று மேலும் கூறியதாவது: திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்த கூட்டணி உதிர்ந்து போகிற நிலையில்தான் உள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும் கூட கொடியேற்றுவதற்கு அனுமதி கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என திருமாவளவன் கூறுகிறார். ஆனாலும், அவர் அந்த கூட்டணியில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார். திமுக இன்னும் பல வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை என கூட்டணி கட்சியினரே சொல்கிறார்கள்.