• June 17, 2025
  • NewsEditor
  • 0

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் அரசின் ஆலோசனை எண்ணிற்கு அழைத்துப் பேசுவது சரியான தீர்வு

பீகார் மாநிலத்தில் உள்ள பன்கா மாவட்டத்தில், அமர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்சே மண்டல். இவரின் மகன் தீபக் (19). தீபக் அருகில் உள்ள பாகல்பூர் கிளினிக்கில் வேலை செய்து வந்தார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவரை தீபக் சந்தித்தார். அவர்களுக்குள் நட்பு உருவானது. அடிக்கடி இருவரும் சமூக வலைதளம் மூலம் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். அப்பெண்ணிற்காக தீபக் ஒரு வாரத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக அவர் நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் அப்பெண்ணைக் காதலிப்பதாக தீபக் சொன்னதும், அப்பெண் தீபக்கோடு பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன உலைச்சலுக்கு ஆளான தீபக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தீபக் நண்பர் மனீஷ் கூறுகையில்,”தீபக்கின் சமூக வலைத்தள கணக்கை ஆய்வு செய்தபோது தீபக் பல முறை தான் காதலிக்கும் பெண்ணிடம் தன்னிடம் பேசும்படி கூறியிருந்தார். அதற்கு அப்பெண் என்னை காதலித்தால் எனக்காக உயிரைக் கொடுத்து காதலை நிரூபிக்கும்படி பதில் கொடுத்திருந்தார். இதற்குப் பிறகே தீபக் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *