
பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதனை ஏற்றதாக அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு ஒக்கலிகா, லிங்காயத்து போன்ற சாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.