
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில், ரூ.5.25 கோடியில் செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணிக்கு, மேயர் ஆர்.பிரியா நேற்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகராட்சி சார்பில், தண்டையார்பேட்டை மண்டலம், 43-வது வார்டு, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.5.25 கோடியில், மருத்துவ இணையியல் படிப்பு பயிலும் உதவி செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மேயர் ஆர்.பிரியா பங்கேற்று திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.