
சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்று, 11-வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 11-வது சர்வதேச யோகா தினத்தை யொட்டி உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் யோகாவை அனைவரும் பயிற்சி செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.