• June 17, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: தமிழ்நாட்டில் இன்னும் முழுமை யான கூட்டணி உருவாகவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தை கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரையிலும், 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கோவை – கரூர் எண்ணெய் குழாய் ஆகிய இரு திட்டங்களையும் சாலையோரம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவிநாசிபாளையம் ராமசாமி கோயில் அருகே கடந்த 10-ம் தேதி முதல்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியை உடைக்கும் எண்ணமில்லை: நேற்று காத்திருப்பு போராட்ட களத்துக்கு வந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறும்போது, “கூட்டணி குறித்து இப்போது எந்த இறுதி கருத்துகளையும் தெரிவிக்க முடியாது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணியும் முழுமையாக உருவாகவில்லை. பாமகவில் ஒரு சிறிய பிரச்சினை மட்டுமே உள்ளது. இந்த பிரச்சினைகளை சமாளித்து ஒன்றுபட்ட மற்றும் வலுவான பாமக விரைவில் களத்தில் இறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *