• June 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்பி திடீரென ராஜினாமா செய்தார். திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு காவல்படையில் சூப்பிரண்டு அந்தஸ்தில் கமாண்டராக பணியாற்றி வந்தவர் அருண். இவர் பணியில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் மாதம் ஆயுதப்படை பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயராமை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில் ‘எனக்கு வேலை பிடிக்கவில்லை. அதனால் விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. பணியிலிருந்து அருண் ராஜினாமா செய்தது ஏன் என தகவல்வெளியாகி உள்ளது. அதன் விபரம்: 2012-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *