
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் சேர்ந்து பேசி முடிவெடுத்தால் மட்டுமே கட்சி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
‘நீயா, நானா’ என்று பார்த்து விடுவோம் என, மகன் அன்புமணிக்கு பகிரங்கமாக பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியில் அன்புமணியின் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார். அந்த வகையில், மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை நீக்கியுள்ளார்.