
காஞ்சிபுரம்: “திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. தங்கள் ஆட்சியின் தவறுகளை மறைத்து வெற்றி பெறலாம் என்று பாமகவுக்குள் இருக்கும் சூழ்ச்சிக்காரர்களை பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது” என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியது: “சமீபத்தில் வரலாறு காணத வகையில் வன்னியர் சங்க மாநாட்டை நடத்தினோம். பத்து லட்சம் வன்னிய இளைஞர்கள் அந்த மாநாட்டில் திரண்டனர்.