
மதுரை: மதுரையிலுள்ள 2 அமைச்சர்களில் ஒருவர் தற்போது அமைதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சத்தில் கூடுதல் கட்டிடத்துக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இப்பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளோம். இப்பகுதியினர்தான் இந்த செல்லூர் கே.ராஜூவை ஊருக்கும், உலகுக்கும் தெரிய வைத்தனர்.