
கோவை: கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையை, கேரள அரசு பராமரிக்கிறது. அணையின் நீர்த்தேக்க அளவு 49.53 அடி என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக 44.61 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 44.61 அடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால், நீர்மட்டம் 44 அடியை நெருங்கும் முன்பே கேரள நீர்வளத்துறையினர் கீழ் மதகு வழியாக தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.