
உக்ரைன் மீது கடந்த ஜூன் 15ம் தேதி ரஷ்யா நடத்திய தக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி.
நாட்டின் மின்சாராக் கட்டமைப்புகள் மீதான புதின் ராணுவத்தின் தாக்குதலை, “அமைதியை ஏற்படுத்த சர்வதேச சமூகங்கள் செய்யும் அனைத்து முயற்சிகள் மீதும் உமிழப்பட்டது” என விமர்சித்துள்ளார்.
மத்திய உக்ரைன் நகரமான கிரெமென்சுக் மீது 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்ய ராணுவம். இதில் மின்சார மற்றும் விவசாயக் கட்டுமானங்கள் பெருஞ்சேதமடைந்தன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
“உக்ரைன் குடிமக்களின் கட்டுமானங்களை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட தாக்குதல் இது.
இந்தப் போரை நிறுத்த சர்வதேச சமூகம் முயற்சிக்கும் அனைத்திற்கும் எதிராக ரஷ்யா உமிழ்ந்திருக்கிறது” எனக் கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
“புதினின் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது நாங்கள் ரஷ்யாவின் மின்சார நிலையங்களைத் தாக்க வேண்டாம் என அமெரிக்கா எங்களைக் கேட்டுக்கொண்டப் பிறகு.
புதின் தன்னை மத்திய கிழக்கின் மத்தியஸ்தகராகக் காட்டிக்கொள்ள நினைக்கிறார்… ஆனால் அவரது இழிவானத்தன்மை இங்கே அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது” என்றும் புதினை விமர்சித்துள்ளார் ஜெலன்ஸ்கி.
10 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி,, இதுவரை அமைதியை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத புதின், மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தகராக செயல்படும் சிந்தனையை மறுத்துள்ளார் ஜெலன்ஸ்கி.
“போர் தானே சமாதானம் செய்வதைப் போன்றது” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், ரஷ்யா எரிசக்தி அமைப்புகள் மீது இன்னும் தீவிரமாக தாக்குதல் நட்த்தலாம் என்றும், உலகின் கண்கள் இஸ்ரேல் ஈரான் விவகாரத்தில் இருப்பதனால் உலகால் கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.