
சென்னை: அண்ணாநகரில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் வரும் செப்டம்பரில் அமலுக்கு வர உள்ளது. இதன்படி, கனரக வாகனங்களுக்கு ரூ.60, கார்களுக்கு ரூ.40, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகரின் பல இடங்களில் சாலைகள் 60 சதவீதத்துக்கும் கூடுதலாக வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு வணிக நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்படுவதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA) தெரிவித்துள்ளது.