
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) விண்ணப்பத்தை, ஐ.சி.சி நிராகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டுமென்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருந்தாலும், அடுத்தடுத்த இறுதிப்போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்தத் திட்டமிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி). அதற்கான காரணங்களும் பட்டியலிடப்படுகின்றன.
ICC – ECB ஒப்பந்தம்
இங்கிலாந்து டெலிகிராப் செய்திதளம் கூறுவதன்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஐசிசியுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறது.
அதன்படி, 2027, 2029 மற்றும் 2031 ஆண்டுகளிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டி இங்கிலாந்திலேயே நடத்தப்படும்.
இதுவரையிலான WTC இறுதிப்போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்திலேயே நடத்தப்பட்டுள்ள நிலையில், ECB தொடர்ந்து அந்தப் பொறுப்பை ஏற்கும்.
வருகின்ற செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் ஐசிசியின் வருடாந்திர மாநாட்டில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட 2021ம் ஆண்டு சவுத்தாம்ப்டனிலும், 2023 ஓவல் மைதானத்திலும், சமீபத்தில் லார்ட்ஸ் மைதானத்திலும் இறுதிப்போட்டிகளை நடத்தியுள்ளது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்.
BCCI அழுத்தம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டெஸ்ட் கிர்க்கெட் விளையாடும் எல்லா நாடுகளிலும் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டுமெனக் கருதுகிறது பிசிசிஐ.
ஆனால் ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி, பல்வேறு நடைமுறை காரணங்களைக் கருத்தில்கொண்டு, இங்கிலாந்தில் நடத்துவதே சரியான முடிவு என எண்ணுவதாக டெலிகிராப் கூறுகிறது.
குறிப்பாக, காலநிலை, மைதான வசதிகள், ரசிகர்கள் வருகை போன்ற காரணங்களாலே முடிவைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…