
புதுடெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "இன்று, மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் எங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை; சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், ஆர்எஸ்எஸ் அழுத்தத்தின் பேரில் மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்பில் இருந்து பின்வாங்கியதா? எப்போதும் போல மோடி அரசு மீண்டும் தனது வாக்குறுதியை மீறப் போகிறதா? நாட்டின் 90% மக்களை மீண்டும் ஒருமுறை நரேந்திர மோடி ஏமாற்றப் போகிறாரா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.