• June 16, 2025
  • NewsEditor
  • 0

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பாஜக கூட்டணியில் தலைமை அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை – அ.தி.மு.க – பா.ஜ.க

இதை உறுதி செய்யும் வகையில் பாஜக அண்ணாமலை, “2026-ல் அமையப்போவது கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். அது பாஜக ஆட்சி என்றே நான் சொல்வேன். வரும் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பவன் நான்.” என்று பேசியது விவாதமானது.

இதுகுறித்து திமுக அமைச்சர் கே.என். நேரு, “கூட்டணி ஆட்சி, பாஜக ஆட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்றெல்லாம் தினமும் சொல்லி பழனிசாமியின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது கமலாலயம்.

கே.என்.நேரு

அதிமுக கூட்டணிக் குழப்பங்கள் தேர்தல் வரை தொடர்ந்தால் அடுத்த மே தினத்தில் இபிஎஸ் எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுக பொதுச் செயலாளர் பதவியையும் இழந்து நிற்பார்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *