
சென்னை: சென்னை மின்சார ரயிலில் பெண் பயணி தவறவிட்ட ரூ.1.32 லட்சம் பணம், செல்போன் அடங்கிய பையை 15 நிமிடத்தில் வில்லிவாக்கம் ஆர்.பி.எஃப் போலீஸார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட போலீஸாரை பயணிகள், உயரதிகாரிகள் பாராட்டினர்.
மயிலாப்பூரை சேர்ந்தவர் வர்கீஸ் ராஜம். இவர் இன்று (திங்கள்கிழமை) காலை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து மின்சார ரயிலில் திருவள்ளூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, சில நிமிடத்தில் ஆவடி செல்லும் மின்சார ரயில் வந்தது. அதில் தவறுதலாக ஏறியுள்ளார். ரயில் புறப்பட்டபோது, இந்த ரயில் ஆவடி செல்கிறது என்பதை அறிந்து, அவர் விரைவாக இறங்கிவிட்டார்.