• June 16, 2025
  • NewsEditor
  • 0

நிகோசியா (சைப்ரஸ்): பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸ் அதிபருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "‘மாக்காரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை எனக்கு வழங்கியதற்காக சைப்ரஸ் அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மரியாதை அல்ல. இது 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த மரியாதை. இந்த விருதை இந்தியாவிற்கும் சைப்ரஸுக்கும் இடையிலான நட்புக்கு அர்ப்பணிக்கிறேன். சிறந்த உலகை உருவாக்க நமது நாடுகள் ஒன்றாகபங்களிக்கும்" என தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *