
சென்னை: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "இஸ்ரோ முன்னாள் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழி பெயர்ப் பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார்.