
புதுடெல்லி: 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ள மத்திய அரசு, கணக்கெடுப்புக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது.
2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்புடன் நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று (ஜூன் 16, 2025) வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், லடாக் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் அக்டோபர் 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.