
புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை(ஜூன் 17) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர், குஜராத் அரசின் பிரதிநிதி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிகாரிகள், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். விபத்து குறித்து ஆய்வு செய்வது, தற்போது நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பு நெறிமுறைகளை மதிப்பிடுவது, அதை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து இக்குழு ஆராயும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.