
தேனி: தேனியில் நடைபெற்று வரும் அனைத்து துறைகள் சார்பிலான ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்து வருகிறார்.
தேனி ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை அனைத்து துறை சார்பிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அமைச்சர் ஐ. பெரியசாமி, ஆட்சியர் ரஞ்ஜீத்சிங், அரசு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் ஷஜீவனா, எம்பி தங்க தமிழ்ச்செல்வன், கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் எம்எல்ஏக்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.