• June 16, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள ராஜனு குண்டே அருகே ஆப்​பிரிக்க பெண் ஒரு​வர் போதைப் பொருள் விற்​பனை செய்​வ‌​தாக குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. அதன் பேரில் போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் ஆப்​பிரிக்க பெண் அகின்​வுமி பிரின்​சஸ் (25) எம்​டிஎம்ஏ எனப்​படும் போதைப் பொருளை வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இதையடுத்து போலீ​ஸார் அந்த பெண்​ணின் வீட்​டில் சோதனை நடத்​தினர். அப்​போது 5.32 கிலோ எம்​டிஎம்ஏ போதைப் பொருள் சிக்​கியது. இதையடுத்து அவரை கைது செய்​து, போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். அதில், ஆப்​பிரிக்​கா​வில் உள்ள நைஜீரியா நாட்டை சேர்ந்த இவர், 2022ல் படிப்​ப​தற்​காக தெலங்​கானா வந்​துள்​ளார். அங்கிருந்து பெங்களூரு வந்து போதைப் பொருள் விற்றுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *