
புதுடெல்லி: ‘‘பாகிஸ்தான் அணு ஆயுத நாடாவதை தடுக்காமல் காங்கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்டது’’ என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளாார். அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
“காங்கிரஸின் வரலாற்று தவறு: பாகிஸ்தான் அணு ஆயுத நாடாக மாறுவதற்கு இந்தியா எப்படி விட்டது’’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 1980-களில் பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. அதை இந்தியாவின் ‘‘ரா’’ உட்பட உளவு துறைகள் உறுதிப்படுத்தின. பாகிஸ்தான் கவுதா என்ற பகுதியில் அணுஆயுத தயாரிப்பு கூடத்தை அமைத்து வந்தது. அங்கு யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் நடைபெற்றன.