
கோவை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்நிலை செயற்கை கருத்தரிப்பு மையம், வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ‘சோமாட்ரோகான்’ மருந்து வழங்குதல் உள்ளிட்ட 4 திட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.