
திருவள்ளூர் / மதுராந்தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸிடம் அக்கட்சித் தலைவர் அன்புமணி மன்னிப்பு கேட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கும், கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கிடையே, பாமகவின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச் சாவடி குழுக்கள் அமைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவை மாநில தலைவர் பாலு, இளைஞர் சங்க செயலாளர் பாலயோகி, அமைப்பு செயலாளர் வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.