• June 16, 2025
  • NewsEditor
  • 0

​திரு​வள்​ளூர் / மது​ராந்​தகம்: ‘என் மீது ஏதாவது கோபம் இருந்​தால் தயவு செய்து மன்​னித்​துக் கொள்​ளுங்​கள்’ என பாமக நிறுவனர் ராம​தாஸிடம் அக்​கட்​சித் தலை​வர் அன்​புமணி மன்​னிப்பு கேட்ட சம்​பவம் அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்​ளது. பாமக​வில் அதன் நிறு​வனர் ராம​தாஸுக்​கும், கட்​சித் தலை​வர் அன்​புமணிக்​கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு​கிறது.

இதற்​கிடையே, பாமக​வின் உறுப்​பினர் சேர்க்​கை, வாக்​குச் சாவடி குழுக்​கள் அமைப்பு உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்க முதல் மாவட்ட பொதுக்​குழு கூட்​டம் நேற்று திரு​வள்​ளூரில் நடை​பெற்​றது. இதில் அன்​புமணி, பொதுச்​செய​லா​ளர் வடிவேல் ராவணன், பொருளாளர் தில​க​பா​மா, சமூகநீதி பேரவை மாநில தலை​வர் பாலு, இளைஞர் சங்க செய​லா​ளர் பாலயோகி, அமைப்பு செய​லா​ளர் வெங்​கடேசன் உட்பட ஏராள​மானோர் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *