
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட்டார். இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தது.