
புனே: புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த இரும்புப் பாலத்தின் கீழ் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், பாலத்தில் இருந்த சுமார் 15 முதல் 20 சுற்றுலாப் பயணிகள் பெருக்கெடுத்து ஓடிய ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.