
புதுச்சேரி: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் திமுகவுக்கு 20 இடமும், கூட்டணிக் கட்சிகளுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியுள்ளார்
புதுவை மாநில உருளையன்பேட்டை தொகுதியின், திமுக “செயல் வீரர்கள்” மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா பேசியதாவது: "இலவச அரிசி டெண்டரில் முறைகேடும், ஊழலும் நடந்துள்ளது. அந்த டெண்டரை கைவிட்டு, வேறு டெண்டரை அரசு விட வேண்டும். இல்லையெனில் திமுக 18-ம் தேதி போராட்டம் நடத்தும். தேர்தல் காலமான 7 மாதங்களும் திடீர், திடீரென போராட்டங்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.