
புதுச்சேரி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், புதுச்சேரிக்கு 3 நாள் அரசு பயணமாக இன்று (ஞாயிற்றுக் கிழமை) மதியம் வந்தடைந்தார். அவரை ஆளுநர், முதல்வர் வரவேற்றனர்.
டெல்லியில் இருந்து புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு இன்று மதியம் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வந்தடைந்தார். அவரை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.