
திருவள்ளூர்: “என் மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன். நீங்கள் வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். நீங்கள் இன்று தேசிய தலைவர். கடந்த ஆண்டு பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில், உங்களை இந்தியாவின் மூத்த தலைவர் என்று சொன்னார்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மணவாளர் நகர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக் கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “பாமக தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கட்சியை ராமதாஸ் தொடங்கி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். சமூகநீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி பாமக. நமது பயணம், கரடு முரடான பாதைகளை கடந்துவந்த கடுமையான பயணம். நம் கட்சியை தொடங்கிய நோக்கமே நமக்கு ஆட்சி அதிகாரம் வரவேண்டும் என்பதற்காகத்தான். அப்போதுதான் தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.