
அகமதாபாத்: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, “ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இன்று காலை சுமார் 11:10 மணியளவில் அவரது டிஎன்ஏ பொருந்தியுள்ளது. அவர் பல ஆண்டுகளாக குஜராத் மாநில மக்களுக்காக உழைத்தார்.” என்று தெரிவித்தார்.