
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப் பேசியிருக்கிறார்.
“முத்துக்குமார் என் வாழ்கையில் மட்டும் ஆனந்த யாழையை மீட்டவில்லை. தமிழ் திரையுலகில் மட்டும் மீட்ட வில்லை. தமிழ் பாடல்களைக் கேக்கக்கூடிய எல்லாருடைய வீட்டிலும் ஆனந்த யாழையை மீட்டிய, மீட்டிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பாடலாசிரியர்.
யாருடைய சுதந்திரத்தையும் அவர் பறித்ததில்லை. ஒரு எளிமையான மனிதர். திரைத்துறையில் இருக்கக்கூடிய எத்தனையோ பேருக்கு நண்பர். என்னை நிறையப் பேரிடம் அறிமுகப்படுத்தி வைத்தது அவர்தான். நான் முதல் படம் எடுப்பதற்கு காரணமாக இருந்தவர் முத்துகுமார்.

யுவன் உடன் எப்போது இசையமைக்க உட்கார்ந்தாலும் அப்போது முத்துக்குமார் குறித்தப் பேச்சுக்கள் வந்துவிடும். இந்த விழா முத்துக்குமாரைத் தமிழகம் முழுவதும் கொண்டாடக்கூடிய ஒரு விழாவாக இருக்கும். இதுவரை சினிமாவில் நடந்திடாத ஒரு விழாவாக இருக்கும் இருக்கும். நா.முத்துக்குமாருக்காக எல்லோரும் ஒன்று கூடப் போகிறோம்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…