
சென்னை: காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டுக்கு ஆதரவாக சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்ய போலீஸார் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் காதல் திருமண விவகாரத்தில் பெண் வீட்டார், மணமகனின் சகோதரனை கடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தியை விசாரிக்க திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலை மையிலான போலீஸார், ஆன்டர் சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர்.